×

“நன்றி, வணக்கம்”: ‘800’ படத்துல நடிக்கிறேன்னு சொல்றாரா? நடிக்கலன்னு சொல்றாரா? குழப்பதை ஏற்படுத்திய விஜய் சேதுபதியின் பதிவு!

“விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘நன்றி வணக்கம்’ என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறாரா? இல்லையா
 

“விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘நன்றி வணக்கம்’ என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறாரா? இல்லையா என்ற பதிலுக்கு அனைவரும் ஆவலாகக் காத்திருந்தனர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

“வணக்கம் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை கடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி நன்றி வணக்கம் என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன் என்று முரளிதரன் கூறியதற்கு நன்றி வணக்கம் என்று விஜய் சேதுபதி பதிலளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் படத்தின் நடிக்கிறேன் என்கிறாரா? இல்லை முரளிதரன் ஆலோசனைபடி 800 படத்திலிருந்து விலகுகிறாரா? என்று தெரியாமல் அனைவரும் குழம்பி வருகின்றனர்.