×

தூக்கிவிட்ட இயக்குனரை மறக்காத யோகிபாபு!

நடிகர் யோகிபாபு திரைத்துறையில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வளர்ச்சியடைந்தவர் என்பது அனைவர்க்கும் தெரியும். முதலில் சிறு சிறு வேடங்களில் தோன்றி வந்த யோகிபாபுவுக்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சிறிது என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார். ‘கலகலப்பு’ படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கிய பெரும்பாலான படங்களில்
 

நடிகர் யோகிபாபு திரைத்துறையில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வளர்ச்சியடைந்தவர் என்பது அனைவர்க்கும் தெரியும். முதலில் சிறு சிறு வேடங்களில் தோன்றி வந்த யோகிபாபுவுக்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சிறிது என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார்.

‘கலகலப்பு’ படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கிய பெரும்பாலான படங்களில் யோகிபாபு நடித்திருப்பார். தற்போது சுந்தர் சி படங்கள் என்றால் கதை கேட்காமலேயே நடிப்பேன் என்று யோகிபாபு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கன்னடத்தில் வெளியான ‘மாயாபஜார் 2016’ படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.

சுந்தர்.சி-யின் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பத்ரி என்பவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தத் தமிழ் ரீமேக்கில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். படத்திற்கான ரீமேக் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

தற்போது மாயாபஜார் படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள யோகிபாபு “அண்ணன் சுந்தர்.சி எனது குடும்ப நண்பர் போன்றவர். அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு. அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்துவிடுவேன். கதையெல்லாம் கேட்கமாட்டேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்துவிட்டேன். பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.