×

பிக்பாஸ் பிரபலத்துடன் காதல்… கிசுகிசுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த யாஷிகா…

பிக்பாஸ் பிரபலம் பாலாஜியுடன் நடிகை யாஷிகா ஆனந்த் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழில் ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, கழுகு 2, ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்திருந்தாலும், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இதையடுத்து நடிகர் மகத்துடன் ‘இவன் தான் உத்தமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின்போது மகத்தும், யாஷிகாவும் காதலிப்பதாக
 

பிக்பாஸ் பிரபலம் பாலாஜியுடன் நடிகை யாஷிகா ஆனந்த் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, கழுகு 2, ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்திருந்தாலும், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றார்.

இதையடுத்து நடிகர் மகத்துடன் ‘இவன் தான் உத்தமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின்போது மகத்தும், யாஷிகாவும் காதலிப்பதாக முதலில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸ் பிரபலமான ஆரவ்வுடன் ‘ராஜ பீமா’ என்ற படத்தில் நடித்துள்ளார் யாஷிகா. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்று அங்கும் தனி ரசிகர்களை கொண்டு கலக்கி வந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோன்று தற்போது பிக்பாஸ் சீசன் 4ன் ரன்னர் பாலாஜியுடன் இருக்கும் புகைப்படங்கள வெளியிட்டுள்ளார். இருவரும் ஜோடியாக சுற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் யாஷிகா, பாலாஜியை காதலிப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இந்த காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் யாஷிகா. சமூக வலைத்தளத்தில் வந்துள்ள செய்தி வதந்தி என்றும், நாங்கள் நல்ல நண்பர்கள் என்று யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.