×

சிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…

தமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலர் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார் சிம்பு. இப்படத்தை அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இயக்கியிருந்தார். நடிப்பு,இசை,நடனம் என பன்முக திறமை கொண்டிருந்தார் சிம்பு. தொடர்ந்து அலை, குத்து,கோவில் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.இதில் சிம்பு
 

தமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலர் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார் சிம்பு. இப்படத்தை அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இயக்கியிருந்தார்.

நடிப்பு,இசை,நடனம் என பன்முக திறமை கொண்டிருந்தார் சிம்பு. தொடர்ந்து அலை, குத்து,கோவில் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.இதில்‌ சிம்பு நடித்த கோவில் படம்‌ பெரிய ஹிட் அடித்தது. கிராமத்து கதைகளத்தில் சாதிய காதலை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மன்மதன் படத்தில் நடித்தார். இந்த படமும் கோவில் படம் போல் மாபெரும் வெற்றி பெற்றது. இருவேறு கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சிம்புக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்பு தனது சினிமா உலகின் அடுத்தக்கட்டத்துக்கு சென்றார். இதன்பிறகு வல்லவன் படத்தில் நடித்தார் சிம்பு. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்புக்கு நயன்தாராவுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிய பழகி வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை பிரிந்துவிட்டனர். இதனால் ரொம்ப நாட்களாக இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர்.

பின்னர் வேட்டை மன்னன் நடித்தபோது ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலும் நீண்டநாள் நீடிக்கவில்லை. இதன்பிறகு எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாத இருந்த சிம்பு, ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டவே, அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். ஆனால் இதுவும் தள்ளப்போனதால் அமைதியாக இருந்து வந்தார்.

இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தார். திரிஷாவுடன் சேர்ந்து நடித்த சிம்புவின் இந்த படம், அழகான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

சிம்புவிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், சில குற்றச்சாட்டுகளும் இருந்தது. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, கால்ஷிட் தராமல் இழுத்தடிப்பார் என சில விஷயங்கள் சொல்லப்பட்டது. இதனால் வம்புக்கார இளைஞனாகவே அடையாளப்படுத்தப்பட்டார் சிம்பு.

இப்படி இருந்த சூழ்நிலையில் திடீரென சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் மெல்லிய தேகத்துடன் இருந்தது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. பழைய சிம்பு திரும்பவும் வந்துட்டார் என மகிழ்ச்சியில் தியேட்டர்களில் கொண்டாடினர். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்பு, பத்துல தல உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் சிம்பு. இந்நாளில் இன்னும் நிறைய படங்கள் நடித்து ரசிகர்களை சந்தோகப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..