×

என்னது இந்த வார எலிமினேஷன் அனிதாவா? கணவரின் பதிவால் எழுந்த குழப்பம்!

அனிதாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று அவரது கணவர் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். இந்த சீசனின் மிக முக்கியமான போட்டியாளர்களுள் அனிதாவும் ஒருவர். எனவே அனிதாவுக்கும் ஒரு ஆர்மி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். பிக்பாஸ் ரசிகர்கள் பெரும்பாலோனோர் அனிதா கடைசி வரை விளையாட வேண்டும் என்று ஆசை தெரிவித்து வருகின்றனர். தற்போது
 

அனிதாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று அவரது கணவர் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். இந்த சீசனின் மிக முக்கியமான போட்டியாளர்களுள் அனிதாவும் ஒருவர். எனவே அனிதாவுக்கும் ஒரு ஆர்மி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். பிக்பாஸ் ரசிகர்கள் பெரும்பாலோனோர் அனிதா கடைசி வரை விளையாட வேண்டும் என்று ஆசை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “காதல் என்பது… உன்னைக் காண ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்றுபதிவிட்டிருந்தார். இதையடுத்து ஷாக் ஆன அனிதா ஆர்மி “என்னது அனிதா வெளிய வரபோறாங்களா” என்று பதறியடித்து அவரது கணவரிடம் கேள்விப் போர் தொடுத்தனர்.

பின்னர் இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “மக்கா நான் சும்மா அனிதாவ மிஸ் பன்றேன்னு தான் போட்டேன்… எலிமினேஷனானு இப்ப தெரியாது… அதனால் டென்சன் ஆவாதிங்க.” என்று பிரபாகரன் தெரிவித்துள்ளார்.