×

ரீ என்ட்ரி கொடுத்த  அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா?

 

பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி தொடக்கம் முதல் தற்போது வரை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிவரும் நிலையில் இன்று எந்த இரண்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வைல்டு கார்டு போட்டியாளர்களாக இதற்கு முன்னர் வீட்டை விட்டு சென்ற மூவர் உள்ளே வருவார்கள். அவர்களது வருகையை தடுக்க நடத்தப்படும் போட்டிகளில் வீட்டில் உள்ளவர்கள் ஜெயிக்க வேண்டும் என பிக்பாஸ் இந்த வார துவக்கத்தில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு செக் வைத்திருந்தார். அதன்படி நடத்தப்பட்ட போட்டிகளில் வீட்டில் உள்ளவர்கள் மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே ஜெயித்தனர். அதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ளது.

தொடர்ந்து இந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் வெளியேற உள்ளனர். அவர்களுக்கு பதிலாக இதற்கு முன்னர் வீட்டை விட்டு சென்ற அனன்யா மற்றும் விஜய் வர்மா உள்ளே வர உள்ளனர்.