×

நானும் நல்லவன்தான்பா… கண்கலங்கிய ‘பாலா’

நானும் நல்லவன்தான்.. நம்புங்கள்.. என பாலா கண்கலங்கியது பிக்பாஸ் ரசிகர்களை உருக செய்ததது. அக்டோபர் 4ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நேற்றுடன் முடிந்தது. 18 போட்டியாளர்களை கொண்டு துவங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, 10கோடி வாக்குகள் பெற்று டைட்டில் வின்னரானார். பாலாஜி ரன்னராக தேர்வானார். இந்த சீசனில் ரசிகர்கள் மறக்கமுடியாத ஒன்று என்னவென்று கேட்டால், ஆரி-பாலா சண்டை தான். பிக்பாஸ் சீசன் 4 துவங்கியது முதலே ஆரி,பாலாஜி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
 

நானும் நல்லவன்தான்.. நம்புங்கள்.. என பாலா கண்கலங்கியது பிக்பாஸ் ரசிகர்களை உருக செய்ததது.

அக்டோபர் 4ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நேற்றுடன் முடிந்தது. 18 போட்டியாளர்களை கொண்டு துவங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, 10கோடி வாக்குகள் பெற்று டைட்டில் வின்னரானார். பாலாஜி ரன்னராக தேர்வானார்.

இந்த சீசனில் ரசிகர்கள் மறக்கமுடியாத ஒன்று என்னவென்று கேட்டால், ஆரி-பாலா சண்டை தான். பிக்பாஸ் சீசன் 4 துவங்கியது முதலே ஆரி,பாலாஜி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் நேர்மையான நடந்துகொண்ட ஆரி ரசிகர்களின் மனதை வென்றார். ஆனால் பாலாஜி, தனது கோபத்தை காட்டி ரசிகர்களை எரிச்சலடைய செய்தார்.

இந்நிலையில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் மேடையில் பேசிய பாலாஜி, வின்னரான அண்ணனுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டை இரண்டு விதமாக இரண்டு விதமாக விளையாடலாம். நான் விளையாடிய மாதிரியும் விளையாடலாம் என்று கூறினார். என்னை வின்னர் அப் ஆக்கியதற்கு நன்றி என கூறினார்.

மனதுக்குள்ளேயே வைத்திருந்தாலும் அது அழுக்குதான். நான் மனத்திற்குள் வைத்துக்கொள்ளளவில்லை. நிகழ்ச்சியில் சில இடங்களில் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள். என் தவறை திருத்திக் கொள்கிறேன். நம்புங்க.. நானும் நல்லவன்தான்..என‌ கண்கலங்கிய பாலா, ரசிகர்களிடம் உருகினார்.