×

பிரபல பிக்பாஸ் நடிகை தற்கொலை…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்ற பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சிறபபாக விளையாடிய நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா. இவர் விளையாடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் கொஞ்ச நாட்களில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜெயஸ்ரீ. பொதுவாக பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் திரையுலகில் புகழ்பெற்று இருப்பார். பின்னர் திரைப்படங்கள், விளம்பரமங்கள் நடிக்க வாய்ப்பு குவியும். ஆனால் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த ஜெயஸ்ரீ,
 

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்ற பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சிறபபாக விளையாடிய நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா. இவர் விளையாடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் கொஞ்ச நாட்களில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜெயஸ்ரீ.

பொதுவாக பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் திரையுலகில் புகழ்பெற்று இருப்பார். பின்னர் திரைப்படங்கள், விளம்பரமங்கள் நடிக்க வாய்ப்பு குவியும். ஆனால் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த ஜெயஸ்ரீ, கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்திலிருந்து விலகி இருந்த ஜெயஸ்ரீ, பெங்களூருவில் உள்ள சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆஷ்ரமத்தில் அமைதியில்லாமல் இருந்த வந்த ஜெயஸ்ரீ-க்கு தற்கொலை எண்ணம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீயின் உறவினர்களும், நண்பர்களும், அவர் தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால் ஆஷ்ரமத்திற்கு தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அப்போது ஜெயஸ்ரீ திடீரென தற்கொலைக்கொண்டதாக ஆஷ்ரமம் தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து மதனயகனஹல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.