×

 திருமண நாளை கொண்டாடிய ரோஜா சீரியல் வில்லி.. வைரலாகும் புகைப்படம்

 
 ‘ரோஜா’ சீரியல் வில்லியாக நடித்து வரும் அக்ஷயா, தனது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

சன் டிவி நீண்ட நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் முக்கியமான சீரியல்கள் ‘ரோஜா’. தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்து வரும் இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகனாக சிபு சூரியனும், நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடிக்கின்றனர். இதோடு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்து வருகிறார். 

இந்த சீரியலில் நீண்ட நாட்களாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஷாமிலி குமார். இவரின் நடிப்புக்கு ஏகப்போக வரவேற்பு இருந்து வந்தது. விறுவிறுப்பாக சீரியல் நகர்ந்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை ஷாமிலி குமார் விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ஷாமிலி கர்ப்பமாக இருப்பதால்தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.  

இதையடுத்து  சன் டிவியில் காலையில் ஒளிப்பரப்பாகி வரும் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த வி.ஜே அக்ஷையா, வில்லியாக நடித்து வருகிறார்.  இதற்கிடையே கடந்த ஆண்டு அக்ஷயாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஒராண்டு நிறைவந்துள்ளதை தனது கணவர் நியந்தன் மணிசேகரனுடன் இணைந்து முதலாம் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி அழகாக கொண்டாடினார். நடிகை அக்ஷயாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.