×

விபத்தில் சிக்கிய 'ஆல்யாமானசா' – கதறி துடித்த 'சஞ்சீவ்'.

 

பிரபல சீரியல் நடிகையான ஆல்யாமானசா விபத்து ஒன்றில் சிக்கி, தன்னுடைய  காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ராஜாராணி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் கலக்கிய ஆல்யா, இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக அந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் ‘இனியா’ தொடரில் துணிச்கலான பெண்ணாக  அசத்தலாக நடித்து வருகிறார். டிஆர்பியில் முன்னணி சீரியலிற்கு ஃடப் கொடுக்கும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிலையில்  யாரும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.  காலில் அடிபட்டு பெரிய கட்டோடு ஹாஸ்பிடல் இருந்தபடி வீடியோ வெளியிட்டு மிகவும் உருக்கமான இவர் பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தனக்காக அனைவரும் பிராத்தித்து கொள்ளுமாறு ஆல்யா கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தனக்கு விபத்து நடந்த சமயத்தில் த்னது கணவர் சஞ்சீவ் கதறி துடித்ததை பார்த்து அவர் தான் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.