×

காதலரை கரம்பிடிக்கும் பிரபல சீரியலின் நடிகை… ரசிகர்கள் வாழ்த்து…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர் ‘மகாபாரதம்’. இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றவர் கன்னட நடிகை கவிதா கவுடா. கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகையாக தற்போது வலம் வருகிறார். தனிகென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள இவர் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஃப்லோவர்களும் இவரை பின்தொடருகின்றனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான ‘பாண்டியன்
 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஒருவர் தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட தொடர் ‘மகாபாரதம்’. இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றவர் கன்னட நடிகை கவிதா கவுடா. கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகையாக தற்போது வலம் வருகிறார். தனிகென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள இவர் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஃப்லோவர்களும் இவரை பின்தொடருகின்றனர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தமிழை தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பலமொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு மளிகைக்கடை மற்றும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், பின்னர் விலகிவிட்டார். தற்போது கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளார். இந்நிலையில் கவிதா கவுடாவிற்கும் சந்தன்குமார் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை தனது இன்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கவிதா. இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சந்தன்குமார் – கவித கவுடா ஜோடி, லஷ்மி பிரம்மா என்ற கன்னடத் தொடரில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.