×

கணவர் சந்தேகமே காரணம்… துப்புதுலங்கும் சித்ரா தற்கொலை வழக்கு…

கணவர் ஹோம்நாத் சந்தேகமே நடிகை சித்ரா தற்கொலைக்கு முழு காரணம் என காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது தற்கொலை செய்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹோம்நாத்திடம் விசாரணை செய்யப்பட்டு வந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்
 

கணவர் ஹோம்நாத் சந்தேகமே நடிகை சித்ரா தற்கொலைக்கு முழு காரணம் என காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது தற்கொலை செய்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹோம்நாத்திடம் விசாரணை செய்யப்பட்டு வந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோம்நாத்தின் நண்பர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கு தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கணவரின் சந்தேகத்தால் மட்டுமே சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் சித்ரா தரப்பு பெற்றோர் சார்பில், சித்ரா தற்கொலை செய்துக்கொண்டதற்கான காயம் எதுவும் கழுத்தில் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை பிப்ரவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.