×

மீண்டும் நாயகி சீரியல் படப்பிடிப்பு: ஹீரோ, ஹீரோயின் மாற்றம்!

சின்னத்திரை படப்பிடிப்பில் கடந்த 31 ஆம் தேதி முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் அவரது உத்தரவில் சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையர் இடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரில் முழு படப்பிடிப்பிற்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது
 

சின்னத்திரை படப்பிடிப்பில் கடந்த 31 ஆம் தேதி  முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  மேலும் அவரது உத்தரவில் சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையர் இடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரில் முழு படப்பிடிப்பிற்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக சில சீரியல்களின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. 

[video:https://www.instagram.com/p/CBSlpBVB0XF/?utm_source=ig_web_copy_link]

இந்நிலையில்  சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி  சீரியல் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  நட்சத்திரா மற்றும் நாயகி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மீண்டும் சன்டிவி சீரியலில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இதனால் நாயகி சீரியலில் நடிகர் நடிகை மாற்றப்பட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.