×

சூரரைப்போற்று படத்தை பார்த்து பிரமித்துப்போன நடிகை சமந்தா !

சூரரைப்போற்று திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்து தள்ளியதை அடுத்து தற்போது நடிகை சமந்தாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா ,அல்லு அர்ஜுனின் ஓடிடி தளமான ஆஹாவிற்காக சமந்தா சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். பின்னர் ராணா கலந்துகொண்டார். அதையடுத்து மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டார். இவ்வாறு முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக அழைத்து வருகின்றனர். இப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, சைதன்யாவுடன் மாலதிவ்ஸ்
 

சூரரைப்போற்று திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்து தள்ளியதை அடுத்து தற்போது நடிகை சமந்தாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா ,அல்லு அர்ஜுனின் ஓடிடி தளமான ஆஹாவிற்காக சமந்தா சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். பின்னர் ராணா கலந்துகொண்டார். அதையடுத்து மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டார். இவ்வாறு முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக அழைத்து வருகின்றனர்.

இப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, சைதன்யாவுடன் மாலதிவ்ஸ் பயணம்,படப்பிடிப்பு என படு பிஸியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் சூரிய நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை தெலுங்கில் பார்த்து ரசித்துள்ளார். தெலுங்கில் ‘ஆகாசம் நீ ஹட்டு ரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பார்த்த சமந்தா, நடிகர் சூரியா மற்றும் அபர்ணா பாலமுராலி ஆகியோரின் நடிப்பைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராமில் எ ஜெம் , அவுட் ஸ்டாண்டிங் இது தான் எனக்கு தேவையான ஊக்கம் என பதிவு செய்துள்ளார்.