×

"உங்கள் கொடூர படம் கேவலமா இருக்கு"…குடிபோதையில் உளறி கொட்டிய உயர்ந்த நடிகர்; வீதிக்கு வந்து மல்லுக்கட்டிய பிரபல இயக்குநர்!

ஆயுசுக்கும் கடன்காரனாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.அதனால நானே சிக்கனமா படத்தை முடிச்சுக்கிறேன் என்று சொல்லியிருந்தார் வம்பு வழக்கில் எப்போதும் பிசியாக இருக்கும் அந்த உயர்ந்த நடிகரின் பார்ட் டூ பஞ்சாயத்து ஆனது பற்றித்தான் கடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக். படத்திலிருந்து இயக்குனரை விலக்கிவிட்டு ஹீரோவே பார்ட் டூவின் மிச்சப் பார்ட்டை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அதற்கு ஹீரோ தரப்பில் சொல்லப்படும் காரணம்… இயக்குனர் ஏகப்பட்ட செலவை இழுத்துவிட்டுட்டார் ; இதே ரேஞ்சுக்கு போனால் நான் ஆயுசுக்கும் கடன்காரனாகத்தான்
 

ஆயுசுக்கும் கடன்காரனாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.அதனால நானே சிக்கனமா படத்தை முடிச்சுக்கிறேன் என்று சொல்லியிருந்தார்

வம்பு வழக்கில் எப்போதும் பிசியாக இருக்கும் அந்த உயர்ந்த நடிகரின் பார்ட் டூ பஞ்சாயத்து ஆனது பற்றித்தான் கடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக். 

படத்திலிருந்து இயக்குனரை விலக்கிவிட்டு ஹீரோவே பார்ட் டூவின் மிச்சப் பார்ட்டை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.  அதற்கு ஹீரோ தரப்பில் சொல்லப்படும் காரணம்… இயக்குனர் ஏகப்பட்ட செலவை இழுத்துவிட்டுட்டார் ; இதே ரேஞ்சுக்கு போனால் நான் ஆயுசுக்கும் கடன்காரனாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.அதனால நானே சிக்கனமா படத்தை முடிச்சுக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

பதிலுக்கு இயக்குனரும் பக்கம் பக்கமாக நீ…ண்ட நெடிய அறிக்கை விட்டு அவர் தரப்பு நியாயங்களைப் பத்தி சொல்லியிருந்தார்.’சொல்வதெல்லாம் உண்மை’ மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வச்சு பஞ்சாயத்துப் பேசினால்தான் உண்மையில் நடந்தது என்ன என்பது தெரியவரும் என்று இண்டஸ்ட்ரி ஆட்கள் வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரு நடிகர் சொன்ன தகவல் இப்போது காற்று வாக்கில் வெளியில் கசிந்திருக்கிறது! 

பார்ட் டூ படத்தின் படப்பிடிப்பு சுமூகமாகப் போய்க்கொண்டிக்கும் போது ஒரு நாள் இரவு நேர சந்திப்பு நடந்திருக்கிறது.சினிமாவில் இரவு நேர சந்திப்பு என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை, சினிமா செய்தியை தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு தெரியாமல் இருக்கப்போவதில்லை! இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டுக்கூட தொடர்ந்து வாசிக்கலாம் தப்பில்லை.

அந்த சந்திப்பின் போதுதான் சம்பந்தப்பட்ட இயக்குனரின் கொடூரமான படம் திரைக்கு வந்திருந்தது.அந்தப் படம் குறித்து கலவையான விமர்சனம் வந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால்,அது இயக்குனருக்குத் தெரியாமல் இருந்திருக்கும் போல… ‘படம் செம ஹிட்… எவ்வளவு வசூல் ஆச்சு தெரியுமா..’ என்று தல,தளபதி படங்களின் வசூலை மிஞ்சும் ஒரு தொகையைச் சொல்லியிருக்கார் இயக்குனர். அதற்கு ஹீரோ உடனடியாக ஒரு கமெண்ட் சொல்ல… இயக்குனருக்கு தூக்கம் தொலைந்துவிட்டது.அன்றைய இரவு விடியாமலே கூடப் போயிருக்க வாய்ப்பிருக்கு! 

அந்த உரையாடலின் வெப்பம் அடுத்த நாள் படப்பிடிப்பில் அனலாக கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. இயக்குனர் ஒன்று சொல்ல ஹீரோ அதற்கு மாற்றுக்கருத்து சொல்ல என்று ஆரம்பித்து கடைசியில் வேறுவிதத்தில் சண்டையாக மாறி இருவரும் பிரித்திருக்கிறார்கள். பட்ஜெட் எகிறியது ஒரு பக்கம் உண்மை என்றாலும் பிரிவுக்கு முதல் புள்ளிவைத்தது அந்த இரவு நேரத்து சந்திப்புதானம்!