×

என் கணவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்க கூடாது : பாடகி சுசித்ரா வேதனை!

கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் பாடகி சின்மயி-யின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று
 

கடந்த ஆண்டு  2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதில் பாடகி சின்மயி-யின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதன் பிறகு சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை  என்று பரவலாகச் செய்திகள் வெளியாகின.  இது குறித்து கூறிய அவர்,  4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். அதை நான் பார்க்கவே இல்லை.  மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் தற்போது  யூடியூபில் சுசி குக் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம், உங்களின் மனநிலை குறித்து முன்னாள் கணவர் கார்த்திக் சமூக வலைதளத்தில் பேசினார். என்ன நடந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “கார்த்திக் அந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் குழப்பம் ஏற்பட்டது. என் வேலை பாதித்தது. அது மோசமான ஐடியா என தெரிந்த பிறகு தான் கார்த்திக் அந்த வீடியோவை நீக்கினார்.  பிரபலங்கள் வீடியோ எப்படி வெளியானது, அதன் பின்னர் யார் உள்ளார்கள் என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நான் அதில் ஒரு வீடியோ கூட பார்த்தது இல்லை. நடந்த சம்பவங்களால் மோசமாக உணரவில்லை. ஆனால் மக்கள் அதை நம்பினர். அமலா பால் உள்ளிட்ட சிலர் எனக்கு ஆதரவு அளித்தனர்”என்று தெரிவித்துள்ளார்.