×

"வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை" : கணவர் யுவன் ஷங்கர் ராஜா குறித்து மனைவி பளீர் பதில்!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலுக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். எந்த விதமான பாட்டாக இருந்தாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திறனைப் பெற்றுள்ளார். இவரின் இசை பயணம் சரியாக அமைந்தது போல இவரின் திருமண வாழ்க்கை அமையவில்லை. அதனால் தான் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. தனது தாயார் மறைவிற்குப் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லீமாக மாறிய யுவன் ஷங்கர் ராஜா தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து 2015-ம்
 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலுக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். எந்த விதமான பாட்டாக இருந்தாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திறனைப் பெற்றுள்ளார்.

இவரின் இசை பயணம் சரியாக அமைந்தது போல இவரின் திருமண வாழ்க்கை அமையவில்லை. அதனால் தான் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. தனது தாயார் மறைவிற்குப் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லீமாக மாறிய யுவன் ஷங்கர் ராஜா தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார்.

இதையடுத்து 2015-ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான ஷாஃப்ரூன் நிஷார் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 


இந்நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர், “யுவனின் மதம் மாற்றம் குறித்து கேட்டதற்கு, எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் நான் அவரை சந்தித்தேன். நான் எண்ணங்களால் இணைந்துள்ளோம். அவர் தேடிய கேள்விகளுக்கு பதில் குரானில் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.

இஸ்லாத்தை விட முக்கியமான ஒன்றை தேர்ந்தெடுப்பேன் என்றால் நான் அதை விவரிக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.