×

பெரியாருக்கு எதிராக வைத்த காட்சி!? பதிலால் சிக்கிக் கொண்ட செல்வராகவன்!

நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து செல்வராகவன் கொடுத்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து செல்வராகவனே விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் உடன் கலந்து கொண்ட நேர்காணலில் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேர்காணலில், படத்தில் நீங்கள் ராமசாமி கதாபாத்திரத்திற்கு எதிராக கடவுள் இருப்பது
 

நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து செல்வராகவன் கொடுத்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து செல்வராகவனே விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் உடன் கலந்து கொண்ட நேர்காணலில் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நேர்காணலில், படத்தில் நீங்கள் ராமசாமி கதாபாத்திரத்திற்கு எதிராக கடவுள் இருப்பது போல சித்தரிதிந்தீர்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் ஆம், என்று செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

இது செல்வராகவன் பெரியாருக்கு எதிராக பேசிவிட்டதாக பலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது செல்வராகவன் அந்த நேர்காணல் குறித்து விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.

“நண்பர்களே! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.