அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் பாலகிருஷ்ணா.

அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் பாலகிருஷ்ணா.

அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஊற்றிக்கொண்ட பிறகும் கவலையே படாமல் தனது 106 வது படத்துக்கு பாயப்பட்டிச் சீனாவுடன் கைகோர்த்திருக்கிறார். ரூலர் என்கிற பெயரில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கி பாலகிருஷ்ணா, சோனல்,வேதிகா, முக்கிய வேடத்தில் பூமிகா நடித்த படம் பாக்ஸ் ஆஃபீஸில் அதிர்ச்சி தோல்வியைக் கண்ட பிறகும்,ஊரெல்லாம் கொரோனா வைரஸுக்கு பயந்து படப்பிடிப்புகளை ஒத்தி வைத்த போதும் பாலகிருஷ்ணா பாயபட்டி சீனுவோடு தன் அடுத்த படத்தை துவக்கி விட்டார்.

அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் பாலகிருஷ்ணா.

இந்த முரட்டு தைரியத்திற்கு காரணம் இந்த பாயப்பட்டி சீனு இவரை வைத்து ‘லிஜெண்ட், சிம்ஹா ‘ என இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார். கடைசியாக இருவரும் சேர்ந்து படம் செய்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ஒரு ஹாட்ரிக் ஆசையில், ஸ்ரேயா சரன், அஞ்சலி என இரட்டை நாயகிகளுடன் இப்போது மீண்டும் களமிறங்குகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை!.

Share this story