கவுதம் மேனன் பி.சி.ஸ்ரீராம் கூட்டணி இணையும் புதிய வெப் சீரிஸ்… லாக்டவுனிற்குப் பிறகு ஆரம்பம்!

கவுதம் மேனன் பி.சி.ஸ்ரீராம் கூட்டணி இணையும் புதிய வெப் சீரிஸ்… லாக்டவுனிற்குப் பிறகு ஆரம்பம்!

தமிழ் சினிமாவில் நுழையும் பெரும்பாலான இயக்குனர்கள் ரஜினியை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். அதுபோலதான் தமிழ் இயக்குனர்கள் பிசி ஸ்ரீராமை தங்கள் படத்திற்கு ஒருமுறையாவது ஒளிப்பதிவாளராக அமர்த்தவேண்டும் என்று ஆசைப்படுவர். அந்தளவிற்கு அவருடைய காட்சிகள் அனைத்தும் வசனங்கள் இல்லாமலே கதையை ரசிகர்கள் தலைக்குள் செலுத்திவிடும்.

கவுதம் மேனன் பி.சி.ஸ்ரீராம் கூட்டணி இணையும் புதிய வெப் சீரிஸ்… லாக்டவுனிற்குப் பிறகு ஆரம்பம்!

தற்போது பி.சி.ஸ்ரீராம் லாக்டவுனிற்குப் பிறகு உள்ள தன்னுடைய திட்டங்களைப் பற்றித் தெரிவித்துள்ளார். லாக்டவுனிற்குப் பிறகு கவுதம் மேனனுடன் ஒரு வெப் சீரிஸில்  பணிபுரிய இருப்பது தான் அடுத்த திட்டம்” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

நீண்ட நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இந்த வெப் சீரிஸின் பணிகளைத் தொடங்க காத்திருப்பதாக பி.சி. தெரிவித்துள்ளார். “இந்த கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலையைத் தொடங்க காத்திருக்கிறேன். உலகம் நம் அனைவருக்கும் சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புவோம்” என்று மேலும் தெரிவித்தார். 

Share this story