“படத்துக்கான ஸ்கிரிப்ட்ட கூட இன்னும் முடிக்கல”… சீயான் 60 குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

“படத்துக்கான ஸ்கிரிப்ட்ட கூட இன்னும் முடிக்கல”… சீயான் 60 குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

வழக்கமான கதைகளை மாற்றி மாற்றி எடுத்து காட்சிகளில் மட்டும் சற்று வித்தியாசம் காட்டி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்த காலம் அது. அப்போது தான் ஒரு இளம் இயக்குனர்கள் கூட்டம் தமிழ் சினிமாவின் கிளிஷேக்களை உடைத்தெறிய வந்தனர். அவர்களில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர். பீட்சா படம் மூலமே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுக்கப்போவதை நிரூபித்து விட்டார். அடுத்து ஜிகர்தண்டா மூலம் கேங்ஸ்டெர் படங்கள் இப்படியும் இருக்கும் என்று திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படி படிப்படியாக முன்னேறி பின்னர் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பையும் பெற்று தனது டிரெக்ஷன் திறமையை நிரூபித்தும் காட்டினார்.

“படத்துக்கான ஸ்கிரிப்ட்ட கூட இன்னும் முடிக்கல”… சீயான் 60 குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் எனும் கேங்ஸ்டர் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. சமீபத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து அடுத்த படம் இயக்க போவதாக அறிவித்திருந்தார்.

சீயான் 60 படத்தைப் பற்றி பேசிய  கார்த்திக் சுப்புராஜ் “ ஜகமே தந்திரம் ‘தனுஷின் முந்தைய கேங்க்ஸ்டர் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும், மேலும் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன், அவர்கள் படத்தில் சீக்ரட்களை கண்டுபிடித்தனர்.

“படத்துக்கான ஸ்கிரிப்ட்ட கூட இன்னும் முடிக்கல”… சீயான் 60 குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

‘சியான் 60’ படத்திற்கான பெண் கதாபாத்திரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை,, அது மட்டுமில்லாமல் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை நான் இன்னும் முடிக்கவில்லை. சமீப காலங்களில் நான் விக்ரம் சாரை சந்தித்தபோது இந்த படம் உருவானது. இரண்டு படங்களின் இசை இயக்குனர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இருவருமே அசத்தலான இசையமைப்பாளர்கள் தான். அவர்கள்  இருவரும் என்னுடைய நல்ல நண்பர்கள்.” என்று கூறியுள்ளார்.

Share this story