மீண்டும் உபேந்திராவை அழைக்கிறது டோலிவுட்!

மீண்டும் உபேந்திராவை அழைக்கிறது டோலிவுட்!

கன்னடதில் ‘இஷ், அ, ஓம்’ படங்களின் மூலம், இயக்குநராகப் பேசப்பட்டவர் உபேந்திரா. ஆனால் நடிக்கத் தொடங்கிய உடன் ‘ரியல் ஸ்டார் உப்பி’ யாக பிஸியாகிவிட்டார். அவரது வித்தியாசமான நடிப்புத் திறமையால் கன்னடத்தைத் தாண்டி தமிழ், தெலுகு படங்க்ளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

மீண்டும் உபேந்திராவை அழைக்கிறது டோலிவுட்!

கடைசியாகத் தெலுங்கில் ‘சன் ஆஃப் சத்தியமூர்த்தி’ படத்தில் வில்லனாக நடித்து கதிகலங்க வத்திருந்தார்.அது அல்லு அர்ஜூன் படம், உபேந்திராவுக்கு ஜோடி நம்ம ஊர் சினேகா. அந்த படத்தின் வெற்றியும், அதில் உபேந்திரா வெளிப்படுத்திய நடிப்பும் தெலுகு சினிமாக்கரர்களை குஷியாக்க அவர்கள் உபேந்திராவைக் குறிவைத்து குவிய ஆரம்பித்து விட்டார்கள்.

மீண்டும் உபேந்திராவை அழைக்கிறது டோலிவுட்!

ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தனது ‘கப்ஸா’ படத்தில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார் உபேந்திரா. ஆனா, சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த புது வரவு மெகா ஸ்டார் வருண் தேஜ் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் நடிக்க வந்த அழைப்பை உபேந்திரா ஏற்றுக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. அந்தப் படத்தில் கிக் பாஸராக நடிக்கும் வருண் தேஜ் அதற்காக அமெரிக்காவிலும், மும்பையிலும் பயிற்சி பெற்று வருகிறாராம்.

Share this story