ஜி.வி‌.பிரகாஷ் பட இயக்குனர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம் !

mani nagaraj

'பென்சில்' படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னுடைய வித்தியாசமான ஒப்படைப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மணி நாகராஜ். 46 வயதாகும் இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

mani nagaraj

நல்ல விமர்சனத்தை பெற்ற இந்த படத்திற்கு பிறகு  கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் மணி நாகராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணி நாகராஜின் திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story