44 வயதில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது இதனால் தான்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

44 வயதில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது இதனால் தான்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

பாஜிகர்  திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர்  நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது  கணவர் ராஜ்குந்த்ரா. இவர்களுக்கு வியான் என்ற 7 வயது மகனும் உள்ளார்.

shilpa

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையான  ஷில்பா ஷெட்டி.தன்னுடைய கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்வார்.  44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை. 

shilpa

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நடிகை ஷில்பா ஷெட்டி- ராஜ்குந்த்ரா தம்பதிக்கு  இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தை வாடகை தாயின் மூலம் பிறந்த குழந்தை என செய்திகள் வெளியாகின. 

44 வயதில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது இதனால் தான்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

இந்நிலையில் தற்போது இந்த செய்தியை ஷில்பா ஷெட்டி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “என் மகனுடன்  சகோதர உணர்வோடு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என நினைத்து தான் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தேன். அதனால் நான் இரண்டாவது முறையாக கருத்தரித்தேன். ஆனால் உடல்நல குறைப்பாட்டால் என் கருச்சிதைவுற்றது. அதனால்  குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து குழந்தை பெற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார். 

 

 

 

Share this story