பெண் தயாரிப்பாளரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் நடிகர்! ஒரே வீட்டில் குடித்தனம்!

பெண் தயாரிப்பாளரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் நடிகர்! ஒரே வீட்டில் குடித்தனம்!

’’அவன் பக்கா பிராடு. என்னை காதலிச்சு ஏமாத்திட்டான்…’’ன்னு போன வருசம் கமிஷனர் ஆபீசுல ஒரு நடிகை புலம்பி தீர்த்துச்சு. அந்த இளம்நடிகர் இப்போ ஒரு பெண் புரடியூசரை தன் கண்ட்ரோலில் வச்சு, ஒரே வீட்டில் குடித்தனம் நடத்திட்டு வர்றதா கோடம்பாக்கத்தில் புலம்பிக்கிட்டு இருக்காரு ஒரு இளம் டைரக்டர்.

சின்னச்சின்ன கேடக்டரில் நடிச்சுக்கிட்டு இருந்தப்பவே காதல் மன்னனாகவே வலம் வந்திருக்கிறார். அதுவும், ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ன்னு டூயட் பாட ஆரம்பிச்ச பிறகு சும்மா இருப்பாரா. அப்படி சும்மா இருக்காததாலதான் காவல் நிலையம் வரைக்கும் கேட்டது ’காயத்ரி’மந்திரம்.

பெண் தயாரிப்பாளரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் நடிகர்! ஒரே வீட்டில் குடித்தனம்!

ஆளு பார்க்குறதுக்கு மட்டுமில்ல, நிஜமாவே ’பட்டதாரி’தான் போலிருக்குது. பட்டதாரியுடன் அதீதமான காதல் கொண்டுவிட்டார் அவர். காசியப முனிவரின் முதல் மனைவியின் பெயர்தான் அவருக்கும். பெயருக்கு ஏத்த மாதிரியே ’உண்மை’யாவே லவ் பண்ணிட்டதால தனிக்குடித்தனத்துக்கும் சம்மதிச்சிருக்கு பொண்ணு.

அப்புறம் என்னடான்னா, ’’தாலி கட்டிட்டேன். அவதான் என் பொண்டாட்டி’’ன்னு காதல் மன்னன் சொல்ல, ‘’அவன் எனக்கு புருசனே இல்ல’’ன்னு கதறிடுச்சு பொண்ணு. கடைசியா, ’’அவன் பக்கா பிராடு. என்னை காதலிச்சு ஏமாத்திட்டான்…’’ன்னு போன வருசம் கமிஷனர் ஆபீசுல ஒரு புலம்பி தீர்த்துச்சு.

பெண் தயாரிப்பாளரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் நடிகர்! ஒரே வீட்டில் குடித்தனம்!

எங்க தனிக்குடித்தனம் நடத்துனாங்களோ அந்த மாநகரிலியே உள்ள கோர்ட்டுல இப்பவும் கேஸ் நடந்துக்கிட்டிருக்குது.

இப்ப அந்த காதல் மன்னன், கொரேனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேலை பார்த்திருக்கிறார். லேடி புரடியூசரிடம், ஹீரோவாக நடிக்க அந்த காதல் மன்னனை ரெகமெண்டேஷன் செய்திருக்கிறார் இளம் டைரக்டர். அந்த புரடியூசருக்கு கல்யாணமாகி பெண் குழைந்தைகளும் இருக்குதாம்.

அதுக்கு பிறகு புரடியூசருடன் காதல் மன்னன் தினமும் டிஸ்கஷன் செய்து வந்திருக்கிறார். இது தெரியாம, படத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ண அஸிட்டென்ட் டைரக்டர்களோட டிஸ்கஷன் செய்துட்டு வந்திருக்கிறாரு டைரக்டர்.

பெண் தயாரிப்பாளரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் நடிகர்! ஒரே வீட்டில் குடித்தனம்!

கடைசியா ஷூடிங்குக்கு கிளம்பலாமான்னு டைரக்டர் கேட்க, ‘’நாங்க ஹனிமூனுக்கு போறோம்’’னு புரடியூசரும் காதல் மன்னனும் சொல்ல, ஆடிப்போயிட்டாராம் அந்த டைரக்டர்.

சரி, எங்காவது போய் தொலையுங்க. எப்படியாவது போய் தொலையுங்க. எனக்கு என் படத்தை எடுக்கணும்னு சொன்னப்ப, இந்த படத்த டிராப் பண்ணிட்டேன்னு சொல்லியிருக்காரு காதல் மன்னன்.

முதலில் விழித்த டைரக்டர் , ‘’ஆமாமா நீதான் இப்ப புரடியூசர் ஆயிட்டியே. நடிக்கக்கூப்பிட்ட பாவத்துக்கு நான் இப்போ நடுத்தெருவுக்கு வந்துட்டேன்’’ன்னு புலம்பித் தவிக்கிறாரு.

Share this story