லாஸ்லியா தந்தை மறைவு குறித்து அபிராமி உருக்கம்!

லாஸ்லியா தந்தை மறைவு குறித்து அபிராமி உருக்கம்!

நடிகை லாஸ்லியாவின் தந்தை நேற்று முந்தைய தினம் கனடாவில் காலமானார். கனடாவில் பணிபுரிந்த மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

லாஸ்லியா தந்தை மறைவு குறித்து அபிராமி உருக்கம்!

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளாக தங்களை விட்டு பிரிந்து கனடாவில் பணிபுரிந்து வருவதாகக் கூறியிருந்தார். அதையடுத்து லாஸ்லியாவின் தந்தையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து லாஸ்லியாவை உற்சாகப்படுத்தினர் பிக்பாஸ் குழுவினர். அவர்களது தந்தை- மகள் பாசம் பார்ப்போரை இதயம் நெகிழ்ச்சி செய்தது குறிபிடத்தக்கது.

தற்போது நடிகை அபிராமி வெங்கடாச்சலம், மரியநேசன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

லாஸ்லியா தந்தை மறைவு குறித்து அபிராமி உருக்கம்!

“நான் இனி உங்களை என் கண்களால் பார்க்கவோ அல்லது உங்கள் கால்களை என் கைகளால் தொடவோ முடியாது, ஆனால் உங்களை என் இதயத்தில் என்றென்றும் நினைவில் கொள்வேன் … நான் உங்களை எப்போதும் மிஸ் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story