கோலிவுட்டில் மீண்டும் ஒரு மரணம்… அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்!

கோலிவுட்டில் மீண்டும் ஒரு மரணம்… அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்!

நடிகர் அருண் விஜயின் மாமனார் மற்றும் தயாரிப்பாளர் என்.எஸ் மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

கோலிவுட்டில் தொடர் மரணங்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இன்று காலை தான் இயக்குனர் தாமிரா கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவு கோலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

கோலிவுட்டில் மீண்டும் ஒரு மரணம்… அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்!

தற்போது நடிகர் அருண் விஜயின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ் மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். கடந்த சில நாட்களாக வியாதியால் அவதிப்பட்டு வந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இவர் அருண் விஜய் நடித்த ‘வா’, ‘மாஞ்சா வேலு’, ‘தடையறத் தாக்க’, ‘மலை மலை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

Share this story