நடிகை நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் உரிமையாளர்!?

நடிகை நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் உரிமையாளர்!?

நடிகை நிக்கி கல்ராணி, தன்னிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது புகாரளித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், 2016-ம் ஆண்டு நிக்கி கல்ராணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிகில் ஹெக்டே என்பவரின் ஓட்டலில் ரூபாய் 50 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் உரிமையாளர்!?

ஒப்பந்தத்தின் படி, நிகில் ஒவ்வொரு மாதமும் தனது லாபத்தில் ஒரு பங்காக, 1 லட்சம் ரூபாயை நிக்கியிடம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால் நிகில் தான் உறுதியளித்தது போல் மாதம் மாதம் 1 லட்சம் பணத்தை நிக்கி கல்ராணியிடம் கொடுக்கவில்லை. மேலும் நிக்கி செலுத்திய முதலீட்டையும் திருப்பித்தரவில்லை.

இதையடுத்து, நிக்கி கல்ராணி அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நிகில் மீது பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் நிகில் ஹெக்டே மீது மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share this story