பாதுகாவலருக்கு கொரானா… தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்…

பாதுகாவலருக்கு கொரானா… தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்…

தனது பாதுகாவலருக்கு கொரானா தொற்று உறுதியானதால் தன்னைத்தானே வீட்டில் பவன்‌ கல்யாண் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாதுகாவலருக்கு கொரானா… தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்…

இந்தியில் ‘பிங்க்‘ திரைப்படம் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து தற்போது அந்த படம் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது.’வக்கீல் சாப்’ என்ற‌ பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது.

பாதுகாவலருக்கு கொரானா… தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்…

இந்த படத்தில் அஞ்சலி,நிவேதா தாமஸ்,அனன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இப்படம் மாறியுள்ளது. ஆந்திரா ‌முழுவதும்‌ திரையரங்குகள் நிரம்பி வழிகின்றது. விமர்சன ‌ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

பாதுகாவலருக்கு கொரானா… தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண்…

ஏற்கனவே இந்த படத்தில் நடித்த நிவேதா தாமஸ் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பவன் கல்யாணும், தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து தன்னுடைய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளபடியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story