போலிக்கணக்கு உருவாக்கி முதல்வரைத் தாக்கிய மர்ம நபர்… கொந்தளித்த செந்தில்!

போலிக்கணக்கு உருவாக்கி முதல்வரைத் தாக்கிய மர்ம நபர்… கொந்தளித்த செந்தில்!

நடிகர் செந்தில் தன் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களால் போலிக்கணக்குகள் துவங்கப்படுவது அதிகரித்து வருகின்றது. தற்போது நகைச்சுவை நடிகர் செந்தில் பெயரில் பல போலி சமூக வலைத்தள கணக்குகள் துவங்கப்பட்டிருப்பதாக அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

போலிக்கணக்கு உருவாக்கி முதல்வரைத் தாக்கிய மர்ம நபர்… கொந்தளித்த செந்தில்!

நடிகர் செந்தில் பெயரில் ஒரு போலி ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர் ஒருவர், அந்தக் கணக்கின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான பதிவையும் வெளியிட்டுள்ளாராம்.


புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், “நான் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நபர். இதுபோன்றவர்களின் செயல்கள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சார்லி தனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Share this story