‘அந்த ஆசை இல்லை’ – கலைமாமணி விருதுபெற்ற சிவகார்த்திகேயன் பளீர் !

‘அந்த ஆசை இல்லை’ – கலைமாமணி விருதுபெற்ற சிவகார்த்திகேயன் பளீர்  !

மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற ஆசை இல்லை என கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

2019 – 2020 ஆண்டு திரைத்துறையில் சாதனைபுரிந்த பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் கலைத்துறையில் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட 42 பேருக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

‘அந்த ஆசை இல்லை’ – கலைமாமணி விருதுபெற்ற சிவகார்த்திகேயன் பளீர்  !

இந்நிலையில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைமாமணி விருதை வழங்கினார். விருது பெற்ற சிவகார்த்திகேயனுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘அந்த ஆசை இல்லை’ – கலைமாமணி விருதுபெற்ற சிவகார்த்திகேயன் பளீர்  !

விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், இந்த விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், அதிலும் கோட்டைக்கு வந்து இந்த விருதை பெறுவது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார். இதைத்தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற ஆசை உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘அந்த ஆசை இல்லை’ என்றும், இந்த விருது இன்னும் எனது திறமையை அதிகரிக்க உத்வேகம் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Share this story