கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வாங்க பைக்கை விற்று நிதி அளித்த நடிகர்!

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வாங்க பைக்கை விற்று நிதி அளித்த நடிகர்!

தெலுங்கு நடிகர் ஒருவர், தனது பைக்கை விற்று ஆக்ஸிஜன் உதவிக்காக நிதி அளித்துள்ளது பலது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் தீவிரமாக மோதி வருகிறது. பல மாநிலங்களில் மக்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆக்ஸிஜன் பொருட்களை கொண்டு வருவதற்கான நிதி திரட்டுவதற்காக தனது பைக்கை விற்றுள்ளார் நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வாங்க பைக்கை விற்று நிதி அளித்த நடிகர்!

“கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்காக எனது பைக்கை விற்றுள்ளேன். இந்த நிதி ஏழைகளுக்கு உதவுவதற்காகச் செல்லும்.” என்று தனது பைக்கின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷவர்தனின் இந்த செயல் பலரது மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே தெலுங்கில் தகிட தகிட, பிரேமா இஷ்க் காதல் மற்றும் அனாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Share this story