“திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை”… நடிகை அனுஷ்கா பதில்!

“திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை”… நடிகை அனுஷ்கா பதில்!

தென்னிந்திய சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. தன் நடிப்புத் திறமையால் பெண்கள் மையமாக வைத்து எடுக்கப்படும் யாவிலும் அனுஷ்காவே நிறைந்திருப்பார். அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய  கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தன் நடிப்பை விதைத்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். 

“திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை”… நடிகை அனுஷ்கா பதில்!

அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவ்வளவு வயதாகியும் அனுஷ்கா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை கேட்காத ஆள் இல்லை. தற்போது இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா பதிலளித்துள்ளார்.

“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. குழந்தைகளுடன் விளையாடவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை காணும் வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் என் மனதை வெல்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்.

“திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை”… நடிகை அனுஷ்கா பதில்!

பார்த்தவுடன் இவரைத்தான் கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை காணும் போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பெற்றோர் எனக்கு 20 வயது நிரம்பியதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இப்போது அதை நிறுத்தி விட்டனர். எனக்கும் சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.” என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

Share this story