கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காயத்ரி!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காயத்ரி!

நடிகை காயத்ரி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதையடுத்து இளைஞர்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் மக்கள் சிலரிடையே தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருவதால் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காயத்ரி!

சாக்ஷி அகர்வால், காஜல் அகர்வால், சிம்ரன், அருண் விஜய், ஜீவா ரஜினிகாந்த் என பல திரைத்துறை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தற்போது நடிகை காயத்ரி முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைத்தது. கையில் லேசான புண் உடலில் லேசான வெப்பநிலை ஏற்ற இறக்கத்தைத் தவிர, எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தொற்றுநோயை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story