நடிகர் சிரஞ்சீவியிடம் தம்பதியர்களாக ஆசிர்வாதம் பெற்ற காஜல் அகர்வால் !

நடிகர் சிரஞ்சீவியிடம் தம்பதியர்களாக ஆசிர்வாதம் பெற்ற காஜல் அகர்வால் !

நடிகை காஜல் அகர்வால் ஆச்சார்யா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிரஞ்சீவியிடம் தம்பதியர்களாக ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவருகிறது.

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்தே விஷயம் தான். தற்போது ஹனிமூன் பயணத்தை எல்லாம் முழுமையாக முடித்துவிட்டு ஊர் திரும்பியுள்ள காஜல், தான் ஒப்பந்தமாகியுள்ள படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆச்சார்யா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் தனது கணவருடன் படப்பிடிற்காக தளத்திற்கு சென்று நடிகர் சிரஞ்சீவியிடம் ஆசிர்வாதம்பெற்று கேக் வெட்டி மகிழ்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிரஞ்சீவியிடம் தம்பதியர்களாக ஆசிர்வாதம் பெற்ற காஜல் அகர்வால் !

கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால் கைவசத்தில் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் இந்தியன்-2 படம் உள்ளது. துல்கர் சல்மானுடன் ஏய் சினாமிகா என்ற படத்திலும் அவர் நடிக்கிறார். மேலும் குயின் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிக்கிறார்.

Share this story