நடிகை சரண்யா பொன்னவன்னனின் தந்தை இயக்குனர் ஏ.பி.ராஜா மறைவு!

நடிகை சரண்யா பொன்னவன்னனின் தந்தை இயக்குனர் ஏ.பி.ராஜா மறைவு!

நடிகை சரண்யா பொன்னவன்னனின் தந்தை ஏ.பி.ராஜா இதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு 95 வயது.
பிரபல மலையாள இயக்குனர் இயக்குனர் ஏ.பி.ராஜா நேற்று (ஆகஸ்ட் 23)  இரவு 8 மணியளவில் அவரது மகள் சரண்யா இல்லத்தில் இருந்த போது இருதயக் கோளாறு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 3 மணிக்கு நடக்க இருக்கிறது.
நடிகை சரண்யா பொன்னவன்னனின் தந்தை இயக்குனர் ஏ.பி.ராஜா மறைவு!
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஏ.பி.ராஜா  1951 – 1986 க்கு இடையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம் மற்றும் சிங்லாலா மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்.  மனசே நினக்கு மங்கலம், ஆதிமா சங்கலா, கஷுகன், பிரார்த்தனா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
நடிகை சரண்யா பொன்னவன்னனின் தந்தை இயக்குனர் ஏ.பி.ராஜா மறைவு!
1929 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்த ஏ.பி.ராஜா 1961 ஆம் ஆண்டில் தனது மலையாள பிளாக்பஸ்டர் “காளியல்லா கல்யாணம்” மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். பின்னர் இவர் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார் மற்றும் அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் 11 படங்களுக்கு மேல் இயக்கினார். சிவாஜி கணேசன், மற்றும் சந்திரபாபு நடித்த “துள்ளியோடும் புள்ளிமான” என்ற படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். .

Share this story