சிம்பு, ஜெய் அடுத்து சுசீந்திரன் கூட்டணி அமைக்கப்போவது யாருடன் தெரியுமா!?

சிம்பு, ஜெய் அடுத்து சுசீந்திரன் கூட்டணி அமைக்கப்போவது யாருடன் தெரியுமா!?

இயக்குனர் சுசீந்திரன் தற்போது மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை எடுத்து முடித்துள்ளார். அப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதையடுத்து சுசீந்திரன் அதையடுத்து நடிகர் ஜெய் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். தீபாவளி அன்று இந்தப் படத்தின் அப்டேட் வெளியானது. அப்படத்திற்கு சிவ சிவா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெய் இந்தப் படத்தின் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

சிம்பு, ஜெய் அடுத்து சுசீந்திரன் கூட்டணி அமைக்கப்போவது யாருடன் தெரியுமா!?

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு மற்றும் திரைப்பட வெளியீட்டு தேதிகள் மிக விரைவில் வெளியிடப்படும் என்று சுசீந்திரன் தெரிவித்தார்.

இரண்டு படங்களைக் கையில் வைத்துள்ள சுசீந்திரன் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார்.

சமீபத்திய அப்டேட் படி, சுசீந்திரன் அடுத்து உதயநிதி ஸ்டாலின் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, ஜெய் அடுத்து சுசீந்திரன் கூட்டணி அமைக்கப்போவது யாருடன் தெரியுமா!?

உதயநிதி தற்போது மகிழ் திருமேனி படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெய் மற்றும் சிம்புவுடனான தனது படங்களைப் போல விரைவாக உதயநிதியுடன் கூட்டணி அமைக்கும் இப்படத்தையும் மின்னல் வேகத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

Share this story