மாஸாக தொடங்கியது ‘புஷ்பா 2’... அல்லு அர்ஜூனுக்கு உற்சாக வரவேற்பு !

pushpa 2

 அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

pushpa 2

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கடந்த சில மாதங்களாக திரைக்கதை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இயக்குனர் சுகுமார். தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜூனின் முக்கிய காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story