கணவரை பிரிந்த நடிகை நிஹாரிகா ?... சிரஞ்சீவி குடும்பத்தில் நடந்த சோகம் !

Niharika

தனது காதல் கணவரை நடிகை நிஹாரிகா பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நிஹாரிகா. முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் ‘விழித்திரு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

Niharika

இதற்கிடையே சைதன்யா என்பவரை நீண்ட நாட்களாக நடிகை நிஹாரிகா காதலித்து வந்தார். இவர் ஆந்திராவில் பிரபல போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன் ஆவார். இதையடுத்து சைதன்யா மற்றும் நிஹாரிகா திருமணம் கடந்த 2020-ஆம் ஆண்டு உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

Niharika

கடந்த 2 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள், திடீரென பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நிஹாரிகாவின் புகைப்படங்களை சைதன்யா நீக்கிவிட்டார். அதேபோன்று நடிகை நிஹாரிகாவும், சைதன்யாவை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துள்ளார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

Share this story