கணவருடன் கோவாவில் சில் செய்யும் அமலா பால்

கணவருடன் கோவாவில் சில் செய்யும் அமலா பால்

தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். மலையாள நடிகையான இவர், ‘நீலதாமரா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் ‘மைனா‘ என்ற திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  இதையடுத்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

அண்மையில், தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 2 மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார். தற்போது அவர் கோவாவிற்கு கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
 

Share this story