ரிஷப் ஷெட்டிக்கு குவியும் வாழ்த்துகள்
![ரிஷப் ஷெட்டிக்கு குவியும் வாழ்த்துகள்](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/e4f8d639e834627b730de8df952659f4.jpg)
கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய படம் காந்தாரா. கன்னடத்தில் தயாரான இந்த படம் மக்களிடம் பெற்ற வரவேற்பால் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள தனது சொந்த கிராமமான கீரடியில் உள்ள அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார். தனது அறக்கட்டளை சார்பில் இந்தப் பள்ளிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனால், ஊர் மக்கள், திரை நட்சத்திரங்கள் பலரும் ரிஷப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.