டப்பிங்கை தொடங்கிய நாகசைதன்யா... ‘கஸ்டடி’ படம் குறித்து புதிய அப்டேட் !

custody

 ‘கஸ்டடி’ படத்தின் டப்பிங்கை நடிகர் நாகசைதன்யா தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

custody

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

custody

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை இன்று நாக சைதன்யா தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story