‘காதல் தி கோர்’ படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியிட்ட மம்மூட்டி.
1668847203025
மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிக்கும் ‘காதல் தி கோர்’ படத்தில் தனது பங்கிற்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தின் இயக்குனரான ஜியோ பேபி இயக்கும் அடுத்த படம் தான் ‘காதல் தி கோர்’. இந்த படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி மற்றும் சுதி கோழிக்கோடு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்காரியா ஆகியோர் திரைக்கதை மற்றும், சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அப்டேட் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருந்தது. அந்தவகையில் படத்தின் ஹீரோவான நடிகர் மம்மூட்டி “ படத்தில் தனது போர்ஷனுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார், மேலும் மிகவும் துடிப்பான குழுவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்றும் பதிவுட்டுள்ளார்.அதனுடன் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
nullCompleted my portions for @KaathalTheCore. Enjoyed working with a very vibrant team.#JeoBaby #Jyotika #KaathalTheCore @MKampanyOffl pic.twitter.com/UACUikhtii
— Mammootty (@mammukka) November 18, 2022