உறுதியாக உருவாகிறது‌ 'காந்தாரா 2'... படப்பிடிப்பு எப்போது தெரியுமா ?

kanthara 2

'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குனர் ரிஷப் ஷெட்டி  இயக்கத்தில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'காந்தாரா'. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். வெறும் 16 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். 

kanthara 2

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரங்கத்தூர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'காந்தாரா' இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருகிறார். இதற்காக கடலோர பகுதிகளுக்கு சென்று தனது உதவியாளர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். 

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக உருவாகவில்லை என்றும், அதற்கு மாறாக வேறு ஜோனரில் உருவாகிறது. இந்த படம் கிராம மக்களுக்கும், அரசனுக்கும் உள்ள கதையாக உருவாக உள்ளது. அரசனை சுற்றியுள்ள நிலங்களையும், மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் கதையாக இருக்கும். மழைக்காலங்களில் இப்படம் படமாக்கவுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 

கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story