‘காந்தாரா’ 100 நாள் வெற்றி... நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி !

kanthara

‘காந்தாரா’ படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக நெகிழ்ச்சி பதிவை ஒன்றை இயக்குனர் ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளார். 

 கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'காந்தாரா'.  பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தை இணைந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

kanthara

இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

சமீபத்தில் இப்படம் அமேசான் ஓடிடித்தளத்திலும் வெளியானது. இந்நிலையில் இப்படம் 100 நாட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இயக்குனர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். அதில், நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பக்தியை ஏற்படுத்தி எப்போதும் கொண்டாடும் ஒரு படமாக இந்த படம் மாறியுள்ளது. இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story