மகேஷ் பாபு கட்அவுட்டுக்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்த ரசிகர்
![மகேஷ் பாபு கட்அவுட்டுக்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்த ரசிகர்](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/d35e945e4a32f3669dcc3919a1cb0386.jpg)
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்துவருகிறது.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது கையை அவர் பிளேடால் அறுத்து ரத்தத்தால் மகேஷ் பாபு கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது