‘தசரா’ படத்திற்காக நான் நிஜமாகவே மது குடித்தேன் – படம்குறித்த அனுபவத்தை பகிர்ந்த ‘நானி’.

ஸ்ரீ காந்த ஓடிலா இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘தசரா’. நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நானி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியதாவது “ படத்தின் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது, குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் மண், கரும்புகை காரணமாக நெஞ்சு எரிச்சலை உருவாக்கியது. இதனால் சரியா தூங்ககூட முடியவில்லை. ஆனால் படம் முடிந்ததும் அதனை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. திருப்தியாகவுள்ளது.
முடிவு மிக சிறப்பாக உள்ளது. நான் இதை சொல்லவேண்டும் படத்தில் தத்ரூபமாக கண்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பிய போதெல்லாம், நான் உண்மையான ஆல்கஹால் முயற்சித்தேன்" என படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நானி.