பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி... மார்ச் மாதம் படப்பிடிப்பு...

பிரசாந்த் நீல் -  ஜூனியர் என்டிஆர் கூட்டணி... மார்ச் மாதம் படப்பிடிப்பு...

தென்னிந்தியாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன்பிறகு அவர் இயக்கிய 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட்டடிக்க பல மொழிகளில் ஹீரோக்கள் விரும்பும் இயக்குனராக மாறியிருக்கிறார். தற்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸை வைத்து 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். வரிசையாக பிரபாஸுக்கு திரைப்படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் 'சலார்' படத்தையே பெரிதும் நம்பியுள்ளார். கேஜிஎப் படத்தின் பாணியிலேயே உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பிரசாந்த் நீல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். 

பிரசாந்த் நீல் -  ஜூனியர் என்டிஆர் கூட்டணி... மார்ச் மாதம் படப்பிடிப்பு...

இந்நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர். பிரசாந்த் நீலுடன் இணைய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தேவரா என்ற திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார்.

Share this story