ஒரேநாளில் வெளியாகும் பிருத்விராஜின் இரண்டு படங்கள்

ஒரேநாளில் வெளியாகும் பிருத்விராஜின் இரண்டு படங்கள்

பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் ஆடு ஜீவிதம். பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்

ஒரேநாளில் வெளியாகும் பிருத்விராஜின் இரண்டு படங்கள்

ஆடுஜீவிதம் படமும் ஏப்ரல் மாதம் வௌியாகிறது. பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து சோட்டோ மியான் என்ற படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. பிருத்விராஜின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில்  உள்ளனர்

Share this story