புஷ்பா பட நடிகரை ரூ.20 லட்சம் செலவில் ஜாமீனில் எடுத்த படக்குழு

புஷ்பா பட நடிகரை ரூ.20 லட்சம் செலவில் ஜாமீனில் எடுத்த படக்குழு 

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் நடித்த பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறது. பான் இந்தியா படமாக மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 

புஷ்பா பட நடிகரை ரூ.20 லட்சம் செலவில் ஜாமீனில் எடுத்த படக்குழு 

இந்நிலையில், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறைக்கு சென்ற புஷ்பா பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரியை படக்குழுவினர் ஜாமீனில் எடுத்துள்ளனர்.  படப்பிடிப்புக்காக 20 லட்சம் ரூபாய் செலவு செய்து அவரை வௌியே எடுத்துள்ளனர். 
 

Share this story